states

img

உ.பி: பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து- 13 பேர் பலி 

உத்தரப்பிரதேச மாநிலம் பரபங்கியில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 13 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் பரபங்கி பகுதியில் வியாழன் அன்று அதிகாலை லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் பலியாகினர் மேலும் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு 50 ஆயிரமும் இழப்பீடு வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது

;